உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அரியவகை மீன் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் பிடிக்கப்பட்ட அரிய வகை மீன் தொடர்பில் கைது செய்யப்பட்ட மீனவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த மீனவரின் 13 இலட்சம் பெறுமதியான படகு, மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் இதற்கு முன்னர் இது போன்ற மீன் வகை சிக்கியதில்லையெனவும் இதற்கு தடை விதிக்கப்படவும் இல்லை எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற சம்பவத்தால் மீனவர்களை கைது செய்து அவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவது வேதனைக்குரியது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க