உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத தாக்குதல்: வர்த்தக அமைப்புகளுக்கு இழப்பீடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட அமைதியற்ற நிலையினால் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக தொகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களை மீண்டும் வியாபாரம் மேற்கொள்வதற்கான முற்பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இழப்பீட்டு முற்பணம் வழங்கப்படும் இது தொடர்பாக 0112-57-58-03, 0112-57-58-13, 0112-57-58-26 தொலைபேசி இலக்கங்கள் மூலமாக விபரங்களை அறிய முடியும்.

கருத்து தெரிவிக்க