உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழரசு கட்சி மாநாடு: ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வாய்த்தர்க்கம்

தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மாநாடு நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவருகின்றனா்.

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து இந்த கவனயீா்ப்பு போராட்டம் உறவினா்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழையாத வண்ணம் நுழைவாயில்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், விசேட அதிரடிப்படையினரும் அங்கு காணப்படுகின்றனா்.

இந்நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களிடம் சென்ற தமிழரசு கட்சி உறுப்பினா்கள் சிலா், நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தனின் வழிநடத்தலில் இந்த போராட்டம் செய்கிறீா்கள் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தா்க்கம் மூண்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க