உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

யால கிரிந்த சம்பவம்: தாயாரும் உயிரிழந்தார்

யால கிரிந்த கடற்கரையில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

ஜூன் 23 ஆம்திகதி யால கடற்கரையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹட்டனைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குறித்த குடும்பம் மீட்கப்பட்டது.

எனினும் தந்தை (38) மற்றும் 4.5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தாய் (33) ஹெலிகொப்டர் மூலம் அம்பாறை மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்கு மாற்றப்பட்டார், பின்னர் உறவினர்கள் அவரை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.

இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க