விளையாட்டு செய்திகள்

அரையிறுதிப் போட்டிக்கான தகுதியை வலுப்படுத்தியது பாகிஸ்தான்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி அதிகரித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

ஹெட்டிங் லீட்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி, நான்காம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி ஐந்தாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

எதுஎப்படியோ, இஞ்சியுள்ள ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த வாய்ப்பு கை நழுவி போகக்கூடும்.

கருத்து தெரிவிக்க