உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மரண தண்டனை கைதிகள் சிறைக்குள் கலக்கத்தில்! பட்டியலில் பெண்ணொருவரே முன்னிலை

மேன்முறையீடு செய்தும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ள கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் கடந்த சில நாட்களாகவே கடும் கவலையில் இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை உட்பட அது சார்ந்த குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 18 கைதிகளின் பெயர் பட்டியலில் நீதி அமைச்சால், ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை வழங்கும் உத்தரவில் தான் கையொப்பமிட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்தே பட்டியலிலுள்ள 18 பேரும் கலக்கத்தில் இருப்பதாகவும், அவர்களின் நடத்தையில் மாற்றம் தென்படுவதாகவும் சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அதேவேளை,  மரண தண்டனைப் பட்டியலில் பெண்ணொருவரின் பெயரே முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க