வெளிநாட்டு செய்திகள்

கரீபியன் தீவில் சுறாக்கள் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் டோரன்ஸ் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ஜோர்தன் லிண்ட்சே ( வயது 21) விடுமுறையை கழிப்பதற்காக தன் பெற்றோருடன் கரீபியன் நாடுகளில் ஒன்றான பகாமாஸ்  சென்றுள்ளார்.

அங்குள்ள பிரபல சுற்றுலாத் தலமான ரோஸ் தீவுக்கு சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார். ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்த அவரை 3 சுறாக்கள் தாக்கின. அவரது கை கால்களை கடித்து குதறியதில் வலது கை துண்டிக்கப்பட்டது. இரத்த வெள்ளத்தில் துடித்த லிண்ட்சோவை அவரது பெற்றோர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.

கருத்து தெரிவிக்க