வெளிநாட்டு செய்திகள்

ஜி 20 மாநாட்டுக்கு இடையே டொனால்ட் ட்ரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில்,இன்று இடம்பெறும் ‘ஜி-20’ உச்சி மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த முத்தரப்பு சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதன் போது, தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க