உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘மரணதண்டனை’- வலுக்கிறது எதிர்ப்பு! மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் உத்தரவில் தான் கையொப்பமிட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (27)  அறிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு மேற்குலக நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. அத்துடன், உள்நாட்டிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

குறிப்பாக மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை தாம் அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி இன்று (27) திட்டவட்டமாக அறிவித்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து, தமது நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி விளக்கமளிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

 

 

 

 

 

கருத்து தெரிவிக்க