பொன்மொழிகள்

அச்சம், அடக்கம் மற்றும் பணிவு பற்றி!-அரிஸ்டாட்டில்.

  • பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
  • தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
  • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாமும் அன்பு செலுத்த முடியாது.
  • நம்முடைய நற்பண்புக்கும், நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
  • கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.அதுபோல, வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் வருவதில்லை.

 

கருத்து தெரிவிக்க