உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேஷியா பண்டா கடல்பிராந்தியத்தில் 7 .3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

220 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க