உள்நாட்டு செய்திகள்

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை

21/4 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 10 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

 

கருத்து தெரிவிக்க