உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கையின் தகுதியற்ற அரசியலால் வெறுப்புணர்வு தீவிரம்

இலங்கையில் வெறுப்புணர்வும் பிரிவுகளும் தீவிரமாகியுள்ளன.

தகுதியற்ற அரசியல் கலாசாரம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மகாராணியாரின் விசேட விருது ஒன்றை பெறுவதற்காக லண்டன் சென்றிருந்த சந்திரிக்கா லண்டனில் இலங்கையர்களை சந்தித்தபோது இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

தமது தந்தை, கணவர் ஆகியோர் கொல்லப்பட்டமை மற்றும் தம்மீது நட்த்தப்பட்ட தாக்குதல் என்பவற்றின் மூலம் வன்முறையின் வலியை தாம் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்துக்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க