சினிமா

யோகிபாபுவின் “தர்மபிரபு” – ஒரு கண்ணோட்டம்.

முத்துக்குமாரன் இயக்கத்தில் யோகிபாபுவின்
நடிப்பில் வரும் 28 ம் திகதி வெளிவர இருக்கும் திரைப்படம் “தர்மபிரபு”. தற்கால அரசியல் நையாண்டிகள் மற்றும் எமலோகக் காட்சிகள் என படத்தின் நகைச்சுவை பக்கத்தில் படக்குழுவினர் இறங்கி அடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் “வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்” என்ற வசனங்களுடன் தொடங்குவது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி “என் உயரமே  5.5 தாண்டா, இமயத்தின் உயரமாம்” என கலாய்க்கும் யோகிபாபுவின் வசனத்தை நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
டிரைலரின் முடிவில் “சாவது யாராக இருந்தாலும் கொல்வது நாமாக இருக்க வேண்டும்” என ரேகா பேச அதற்கு ராதாரவியின் பதில் நடிப்பும் அருமையாகவே உள்ளது. இவை மட்டுமின்றி தமிழ் மொழி குறித்த வசனமும் இன்றைய முக்கிய பிரச்சினைகளின் ஒன்றான மொழிப் பிரச்சினையை எடுத்து காட்டுகின்றது. மொத்தத்தில் இன்றைய சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு நகைச்சுவைகளுடன் வெளிவர இருக்கும் இப்படம் வெற்றிப் படமாக அமைய வாய்புகள் உள்ளது.

கருத்து தெரிவிக்க