உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனை போராட்டத்துக்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

கல்முனையில்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கற்கிழமை முதல் கல்முனையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் இதற்கு முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க