வெளிநாட்டு செய்திகள்

ஈரான் பெருமிதம்

அமெரிக்க உளவுத்துறையின் சதித்திட்டத்தை கண்டு பிடித்து முறியடித்து விட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முறுகல் நிலை முற்றி வருகின்ற நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த வசதியாக வளைகுடா பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது. அண்மையில் ஓமான் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டு எரிந்த சம்பவம் தொடர்பில் , இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சுமத்தி வருகின்றன .

இந்நிலையில். ஈரானின் ‘ இர்னா’ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , அமெரிக்க உளவுத்துறையின் சதித்திட்டத்தை முறியடித்து விட்டதாக ஈரானின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.ஐ.ஏ உடன் தொடர்புடைய உளவுப்பிரிவில் செயற்பட்ட பலரை கைது செய்து அமெரிக்க உளவுத்துறையின் செயற்பாடுகளை முடக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க