உள்நாட்டு செய்திகள்புதியவை

குருநாகலில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

குருநாகலை யடிகல்பொத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்று கொண்டிருந்தவர்களுடன் மோதியுள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தாய் மற்றும் மகளுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க