உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் இந்து ஆலய வளாகத்தில் பாரிய பௌத்த விகாரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலய வளாகத் தில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணித்து இருப்பதால் ஆலயத்தின் கிரிகைகளை செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது

மீள்குடியேற்றம் இடம்பெற்றதில் இருந்து இன்று வரை இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் ஆலய கிரிகைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சப்த கன்னிமார் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க பன்னெடுங்கால பழமை வாய்ந்த ஆலயமாக காணப்படுகிறது.

ஆலய வளாகமானது யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தால் அபகரி க்கப்பட்டு குறித்த காணியில் பாரிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு நெருக்கடிகளையும் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயமாக ஆலய தரப்பு மற்றும் கிராம மட்ட அமைப்புக்களால் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த விடயமாக உடனடியாக சம்மந்தப்படட தரப்புக்கள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க