உள்நாட்டு செய்திகள்புதியவை

மஹிந்த மற்றும் அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள்! பிரேரணை முன்வைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57 பில்லியன் ரூபா நிதிகோரி குறைநிரப்பு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கான யோசனையை அண்மையில் பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க