உள்நாட்டு செய்திகள்புதியவை

கருத்தடை தொடர்பில் முறையான விசாரணை அவசியம்-அரச மருத்துவ சங்கம்

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கருத்தடை தொடர்பில் முறையான விசாரணை அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

குருநாகல் மகப்பேற்று வைத்தியசாலை வைத்தியர் மொஹம்மட் ஷாபி, சட்டவிரோதமாக கருத்தடை மேற்கொண்டுள்ளதாக ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றசாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரச மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் மொஹம்மட் ஷாபி கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க