வடக்கு செய்திகள்

உரிய நீர் விநியோகம் இன்றி சிறுபோக செய்கைகள் அழியும் அபாயம்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கை உரிய நீர் விநியோகம் இன்றி அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 16100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான பயிரச்செய்கைக்கூட்டம் கடந்த மார்ச்மாதம் 12ம்திகதி ஆரம்பிக்கப்பட்டது.

திட்டமிடப்பட்ட அளவுக்கு மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் உரிய முறையில் பயிர்ச்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

குளத்தின் நீர் மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வரும் நிலையில் பயிர்ச் செய்கைக்கான நீர் விநியோகம் செய்யும் அமைப்புக்கள் சீராக நீர் முகாமைத்துவத்தை பின்பற்றாதுள்ளனர். இதனால் பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க