உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் அழிவிற்கு ஐ.தே.கவே பொறுப்பு கூற வேண்டும்- மகாநாயக்க தேரர்

நாட்டின் அழிவிற்கு ஐக்கிய கட்சியே பொறுப்பு கூற வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷ களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மகிழ்ச்சியான விடயமாகும். ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டின் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கின்றோம்.

இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை எமது நாட்டில் பௌத்த மதத்தில் மாத்திரமன்றி, ஏனைய மதங்களிலும் இலங்கையருக்குரிய தனித்துவ அடையாளம் இருக்கின்றது. இலங்கையர் என்ற அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் ரணில் கடந்த மாதம் தேரரை சந்தித்த போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க