வெளிநாட்டு செய்திகள்

தற்கொலை செய்யவுள்ளேன் பிரதமருக்கு விவசாயி கடிதம்

உத்தரபிரதேச மாநில விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு தற்கொலை செய்ய உள்ளதாக கடிதம் எழுதியுள்ளார்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங்கினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

‘குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அதற்கு அனுமதியுங்கள் கிணற்று நீர் மிகவும் உவர்ப்பாக உள்ளது.
தண்ணீரை குடிக்க முடியவில்லை.

என் மகள்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. நீரில் உப்பு அதிகமாக இருப்பதால் பயிர்களும் கருகிவிட்டன. கால்நடைகளும் குடிக்க மறுக்கின்றன.

தீர்வுகாண அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. எனவேதான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கூறியுள்ளேன்’ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விவசாயி வசிக்கும் பகுதியில் உள்ள கிணற்று நீர் குடிக்க முடியாத அளவு உவர்ப்பாக உள்ளதாக அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அதனை அலட்சியம் செய்துள்ள நிலையில் சந்தரபால்சிங் பிரதமர் மோடிக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

கருத்து தெரிவிக்க