வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் படையினர் தாக்குதல்- 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தான் கஜினி மாகாணத்தின் பங்கோர் என்ற பகுதியில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் அதிகளவான ஆயுதங்களும், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

இந்த தாக்குதலின்போது ராணுவத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் அறிவிக்கப்படவில்லை..

தலிபான் குறித்த பகுதியில் பதுங்கி இருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தததை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க