இலங்கை

இலங்கை போர்க்குற்றங்கள் புரியவில்லை! சாட்சியமளிக்க விருந்த கருணா

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, ​​இலங்கை போர்க்குற்றங்கள் புரியவில்லை என்பதற்கு சாட்சியமளிக்க கருணா அம்மான் முன்வந்தார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்ததாக இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்தபோது, இலங்கை போர்க்குற்றங்கள் செய்யவில்லை என கருணா அம்மான் பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.
அத்துடன் யுத்தத்தை வெற்றிகொள்ள கருணா அம்மானின் ஆதரவு மிகவும் முக்கியமாக இருந்தது. எனினும் கருணா அம்மான் தெரிவித்த கருத்தில் சிக்கல் இருப்பதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க