மலையகச் செய்திகள்

கிரிக்கட் சுற்றுப்போட்டியின் போது மோதல் – 6 பேர் விளக்கமறியல்

விளையாட்டு போட்டியின் போது மோதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 6 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 5 சிறுவர்களை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வைக்குமாறும் அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு நேற்று முன்தினம்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் இடம்பெற்றது.

இதைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை சம்பவம் தொடர்பிலான சிசிடிவி ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளமைகுறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க