உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஹெரோயின் போதை பொருளுடன் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்ட ஐவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டிய சந்தைப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 95 .88 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரு உள்நாட்டவர்கள், இரு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் அமரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஹொங்கோங்கில் இருந்து போதைப்பொருளை பெற்றுள்ளதாகவும் அவர்கள், கைது செய்யப்பட்ட உள்நாட்டவரின் நண்பர் எனவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க