உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கைக்கு சிங்கப்பூர் பாராட்டு

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி அமைதியான சூழலை ஏற்படுத்த இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்கு சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் ஷண்முகம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிரிஷ்ணனுடன் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போதே அவர் இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் பயங்கரவாதத்தில் இருந்து தடுத்தல் அதனை ஒழிக்க இருநாடுகளும் சேர்ந்து எடுக்க கூடிய நடவடிக்கை தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க