உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி , ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (14) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும் ,பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காங்கேசன்துறை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவித்தல், மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் கடற்படையினருக்குமிடையில் சுமூகமான நிலைமைகளை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்து இதன் போது  கலந்துரையாடப்பட்டது.

கருத்து தெரிவிக்க