உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

மானஸ் தீவில் உள்ள இலங்கை தமிழரை பிரித்தானியாவுக்கு அனுப்பக் கோரிக்கை

அவுஸ்திரேலியாவினால் பப்புவா நியூகினி மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவரை பிரித்தானியாவுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

37வயதான திவ்வியராஜா சுப்பிரமணியம் என்பவர் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு முதல் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரித்தானியாவில் வசிக்கும் அவருடைய சகோதரி அவரை தம்முடன் இணைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க