உள்நாட்டு செய்திகள்புதியவை

காஞ்சிபான இம்ரானிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணை..!

பாதாள உலக குழு தலைவர்களுள் ஒருவரான காஞ்சிபான இம்ரான் என அறியப்படும் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரானை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சன டி சில்வா முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, காஞ்சிபான இம்ரானை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

இதனையடுத்து, சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி மீளவும் நீதவான் கண்காணிப்புக்காக முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க