விளையாட்டு செய்திகள்

கிரிக்கட் உடையை பார்த்து கண்கலங்கிய யுவராஜ்சிங்

2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கட் அணி அனுப்பிய உடையை தொட்டுப் பார்த்து யுவராஜ்சிங் கண் கலங்கியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த யுவரராஜ், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் 2016ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கினார்.

இந்த போட்டிக்காக அனுப்பட்ட கிரிக்கட் ஆடையினை தொட்டு பார்த்தே யுவராஜ் கண் கலக்கியுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி இச்சம்பவத்தை உருக்கமாக ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க