வெளிநாட்டு செய்திகள்

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நரசிம்மன் ஆளுநராக இருந்துவந்தார். அவருக்கு பதிலாக ஆந்திராவிற்கு சுஷ்மா சுவராஜ் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க