விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் :மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சு தேர்வு

உலக கிண்ன கிரிக்கெட் போட்டியில்,  தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில்  டொஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள்  அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து தென்ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்திலாவது எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டி பந்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில்  ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது.

.

கருத்து தெரிவிக்க