விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்துள்ளோம் -விராட் கோலி

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கிடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றியடைந்துள்ள நிலையில் அணித்தலைவர் கோலி பெருமிதம் அடைந்துள்ளார்.

இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது என விராத் கோலி தெரிவித்துள்ளார்.

குறித்த வெற்றி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு அணித்தலைவராக இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.அவுஸ்திரேலியாவிடம் இறுதியாக தொடரை இலங்கை நிலையில் எம்மை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது.
அதனால் முனைப்புடன் களமிறங்கி இருந்தோம். நாம் தொழில் நேர்த்தியுடன் விளையாடினோம் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்களால் வெற்றியடைந்தது.

கருத்து தெரிவிக்க