வடக்கு செய்திகள்

மின் கம்பம் வீழ்ந்ததில் சமுர்த்தி பயனாளிகள் மூவர் காயம்

மன்னாரில்- சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வில் தற்காலிக மின் கம்பம் விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வயோதிப ஆண் ஒருவரும்,வயோதிப பெண்கள் இருவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயணாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நிகழ்வுக்கென புதிதாக அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய தற்காலிக மண்டபத்தின் மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் மின் குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் சரிந்து வீழ்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க