உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஐஎஸ் தொடர்பு. 5 இலங்கையர்களின் இலக்கங்கள் கையளிப்பு

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐந்து பேரின் தொலைபேசி எண்களை இந்தியா,இலங்கைக்கு பரிந்துள்ளது.

இவர்கள் ஐஎஸ் சந்தேகநபரென்று கூறி கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ளவருடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விசாரணைகளி;ன் நிமத்தம் என்ஐஏ அமைப்பினர் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களே ஐந்;து இலங்கங்களையும் இலங்கை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

எனினும் இந்த இலக்கங்களுக்குரியவர்கள் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களா? என்பது தெரியவரவில்லை.

இதேவேளை கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் என்பவருக்கு இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறப்போவது தெரிந்திருந்ததாக என்ஐஏ விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க