உள்நாட்டு செய்திகள்புதியவை

பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை இணையத்தளத்தில் பெற வாய்ப்பு!

பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேற்று சான்றிதழை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பரீட்சைத் திணைக்களத்திற்கு வராமல் சான்றிதழ்களின் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டணங்களை கடனட்டை அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்த வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அல்லது தபால் நிலையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்றுச்சீட்டு இலக்கத்துடன், இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க