உள்நாட்டு செய்திகள்புதியவை

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மோடியுடன் மைத்திரி பேச்சு!

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரும் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இராண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி மீண்டும் இலங்கைக்கு அரசு முறைப்பயணமாக வருகின்றார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க