வடக்கு செய்திகள்

மன்னார் எருக்கலம்பிட்டியில் 360 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு

மன்னார் எருக்கலம்பிட்டி 9 ஆம் வட்டார பகுதியில் 360 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்று காலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் 12 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் இருந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு இப்போதைப்பொருட்களை மீட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க