உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்கள வாகனம் தீக்கிரையாகியது!

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனமொன்று திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் கனகராயன்குளம் சோதனைச் சாவடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி இன்று பிற்பகலம் 3.30 மணியளவில்  சென்றுகொண்டிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனம் திடீரென்று தீப்பிடித்துள்ளதாக கனகராஜன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவ்வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர். எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயில் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இவ்விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க