உள்நாட்டு செய்திகள்புதியவை

தச்சு தொழில் தொடர்பான விபரங்கள் பாட விதானத்தில் இணைத்துக் கொள்ளப்படும்: பந்துல

தச்சு தொழில் தொடர்பான விபரங்கள் பாட விதானத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மர ஆலைகளை இல்லாமல் செய்யப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சியின் கீழ் எதிர்வரும் காலத்தில் மர ஆலைகள் அதிகரிக்கப்படும். தச்சுத் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் மர ஆலைகளில் பணி புரிவோருக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், தமது அரசாங்க ஆட்சியின் கீழ் ஒருபோதும் மர ஆலைகள் மூடப்படாது என்ற உறுதி மொழியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வழங்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க