வடக்கு செய்திகள்

வேனாவில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்கின்ற தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு மேற்கு வேனாவில் சுகாதார நிலையம் திறந்துவைக்கப்பட்டது .இந்நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் , முல்லைத்தீவுமாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி உமாசங்கர் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ம.பிரதீபன் புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கெங்காதீஸ்வரன் வைத்திய கலாநிதி சத்தியரூபன் மற்றும் தயானந்தரூபன் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் அமுதராஜ், பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் வேணாவில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் நன்மையடைவதாக இப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

.

கருத்து தெரிவிக்க