வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் கடும் மோதல்: 21 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிரிய இராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அரச படைகளுக்கும் ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் இயக்கத்துக்கும் இடையே இடம்பெற்ற தாக்குதலில் இவ்வாறு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை படைகளின் தாக்குதலில் அல்ஷாம் இயக்கத்தினர் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டுகளை வீசினர். அதனை தொடர்ந்து இராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான மோதல் இடம்பெற்றது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க