உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாடாளுமன்றக்குழுவின் முன்னால் முஸ்லிம் அமைப்புக்கள்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், காத்தான்குடி பள்ளிவாசல்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளன.

எதிர்வரும் 11ஆம் திகதி இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளனர்.

இதேவேளை மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் அன்றைய தினம் தமது சாட்சியத்தை பதிவுசெய்யவுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாதக்குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்கனவே தாம் முறையிட்டிருந்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க