வெளிநாட்டு செய்திகள்

பிரதமர் மோடிக்கு பிரதமர் இம்ரான்கான் கடிதம்: பிரச்சினைகளை பேச தயார்

கேஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளை பேச தயாராக இருப்பதாக தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லையென இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதுவதே இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க