உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சர்வதேசத்திடம் முறையிடுவோம்-ரிசாத் பதியுதீன்

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் முறைக்கேடான செயல்கள் தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்

.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் எஸ்பி திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக நேற்று காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாட்டை செய்த பின்னர் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் கிளை மற்றும் சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களை சந்தித்து நிலைமைகளை விளக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

தேசிய தௌஹீத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான்,சத்தோஸ வாகனத்தை பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

அதேபோன்று 52 நாள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்காகவே எஸ்பி திஸாநாயக்க தம்மீது வீண்பழிகளை சுமத்துகிறார் என்றும் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க