உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசரிடம் முறையிடவில்லை-மங்கள

கர்தினால் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்கு கடிதம் மூலம் முறையிட்டதாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் குற்றப்புலனாய்வுத்துறையிடம் கேட்டுள்ளார்.

தமது நாடாளுமன்ற கடிதத்தலைப்பில் கடந்த 3ஆம் திகதி இந்த முறைப்பாடு பரிசுத்த பாப்பரசருக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதில் உண்மையில்லை என்று அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க