வடக்கு செய்திகள்

அளம்பில் கமநல சேவைத்திணைக்களத்தினால் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு- அளம்பில் நாட்டுக்கான ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சயந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 21 விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களும் 05 விவசாயிகளுக்கு சூரியமின்கல நீர் இறைக்கும் இந்திரங்களும் 21 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமாமகள் மணிவண்னன் முல்லைத்தீவு மாவட்ட செயலக விவசாயப்பணிப்பாளர் இ.கோகுலதாசன் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளார் எஸ்.புனிதகுமார், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தார் எஸ் .சுகந்தன் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க