வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் வான்தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் நேற்று முன் தினம் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் குறித்த மாகாணத்தை மீட்க அரச படைகள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்களின் போதே பொது மக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க